Jesus Power
Ministries

Faith • Truth • Hope

Faith Digest

Discover inspiring Bible messages, practical Christian teachings, devotional thoughts and faith-building reflections for everyday life.

Showing archive September 2026
Clear Filter
அன்பை தீர்மானிப்பது யார்?
07 Sep

அன்பை தீர்மானிப்பது யார்?

««“நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல...” — 1 யோவான் 4:10»»

இன்றைய வேத பகுதி: 1 யோவான் 4:7–21 அன்பு யாருடைய செயல்களைப் பொறுத்தது? குறிப்பிட்ட ஒருவர் தன் தாய், தந்தை, சகோதரர்கள், நண்பர்கள் யாவராலும் அன்பற்றவர் என்றும், கொடுங்குணம் படைத்தவர் என்றும் பெயர் வாங்கியுள்ளார். ஆனால், அவருடைய மனைவி மட்டும், “என் கணவனைப் போல அன்புள்ளவர் யாருமில்லை” என்று கூறுவாளாம். அது உண்மைதான். அவன் தன்னுடைய மனைவியை மட்டும் உண்மையிலேயே மிக அதிகமாக நேசிக்க இயன்றவனாயிருந்தான். ஏனென்றால், அவள் அவனுடைய...

Read
வாழ்வெல்லாம் இயேசுவுக்கே!
05 Sep

வாழ்வெல்லாம் இயேசுவுக்கே!

«“ஜீவ அப்பம் நானே...” — யோவான் 6:35»

இன்றைய வேத பகுதி: யோவான் 6:35–56 வாழ்க்கையோடு கலக்கும் உணவு: ஒரு ஆப்பிள் பழத்தை இன்று சாப்பிடுகிறோம், இரண்டு நாட்கள் கழித்து அந்த ஆப்பிள் பழம் இப்போது எங்கே இருக்கிறது என்று நம்மால் சொல்ல முடியாது. அதன் சத்துக்கள் நம்முடைய உடலோடு கலந்து விடுகின்றன. இரத்தம், நரம்புகள், எலும்புகள் மற்றும் உடலின் பல பகுதிகளுக்கும் அதன் சத்துக்கள் பயன்படுகின்றன. “இந்தச் சத்து இதோ என் கையில் இருக்கிறது” அல்லது “இதோ என் காலில் இருக்கிறது”...

Read
யார் உணர்த்துகிறார்?”
04 Sep

யார் உணர்த்துகிறார்?”

«“அவர் வந்து பாவத்தைக் குறித்தும்...” — யோவான் 16:8»

இன்றைய வேத பகுதி: யோவான் 16:1–16 பிரசங்கம் கேட்கும்போது மட்டும் உணர்த்தப்படுகிறோமா? ஒரு கிறிஸ்தவ சகோதரர் பாவங்களையும் தவறுகளையும் நன்றாகச் சுட்டிக்காட்டும் பிரசங்கங்களை விரும்பிக் கேட்பார். ஒரு வல்லமையான பிரசங்கத்தைக் கேட்டவுடன், தன்னுடைய வாழ்க்கையில் உள்ள தவறுகளை ஆழமாக உணர்ந்து, பாவ உணர்வுடன் கண்ணீர் சிந்தி ஜெபிப்பார். “அந்த வார்த்தைகள் என்னுடைய பாவத்தை நன்றாக உணர்த்தியது” என்று சொல்வார். ஆனால் ஒரு விசித்திரமான விஷய...

Read
ஏன் விடுதலை இல்லை?
03 Sep

ஏன் விடுதலை இல்லை?

«“சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.” — யோவான் 8:32»

இன்றைய வேத பகுதி: யோவான் 8:20–47 சத்தியத்தை அறிந்தால் மட்டும் போதுமா? ஒரு பிரபல தத்துவ அறிஞர் எழுதிய ஒரு புத்தகம் லட்சக்கணக்கான மக்களைச் சிந்திக்கத் தூண்டியது. பணம், பொருள், சொத்து, அந்தஸ்து, பதவி, சுகபோகங்கள் ஆகியவற்றின் மூலம் மனிதன் தன்னைத் திருப்திப்படுத்த முயற்சித்தாலும், இறுதியில் அவற்றால் உண்மையான திருப்தியைப் பெற முடியாது என்பதையே அந்தப் புத்தகம் எடுத்துரைத்தது. அந்தப் புத்தகத்தைப் படிப்பவர்கள், அதன் ஆசிரியர்...

Read
“நாளைய கடந்தகாலம்”
02 Sep

“நாளைய கடந்தகாலம்”

«“நான் துன்மார்க்கன் அல்ல என்பது உமக்குத் தெரியும்.” — யோபு 10:7»

இன்றைய வேத பகுதி: யோபு 10:1–22 கடந்தகாலம் ஏன் முக்கியம்? யோபுவின் வாழ்க்கையில் ஒருகாலத்தில் எல்லாமே நன்றாக இருந்தது. ஆனால் திடீரென அவனுடைய வாழ்க்கையில் ஒன்றன்பின் ஒன்றாக உபத்திரவங்கள் வந்தன. செல்வம் போனது, பிள்ளைகளை இழந்தான், சுகத்தை இழந்தான், நண்பர்களின் வார்த்தைகளாலும் காயப்படுத்தப்பட்டான், வாழ்க்கையே முடிந்துவிட்டது என்று சொல்லக்கூடிய அளவிற்கு நெருக்கடியான நிலைக்கு வந்தான். ஆனால் அந்த எல்லா உபத்திரவங்களின் நடுவிலு...

Read
அற்புதமா? சத்தியமா?
01 Sep

அற்புதமா? சத்தியமா?

«“வானத்திலிருந்து ஓர் அடையாளத்தை...” — மத்தேயு 16:1»

இன்றைய வேத பகுதி: மத்தேயு 16:1–12 அற்புதம் நடந்தால் மட்டும் போதுமா? இயேசுவின் வாழ்க்கையில் தெய்வீக குணாதிசயங்களும், தெய்வீக வெளிப்பாடுகளும், தெய்வீக வல்லமைகளும், தெய்வீக மகிமைகளும் நிறைவாக இருந்தன. அவர் தேவனால் அனுப்பப்பட்டவர் என்பதற்கு போதுமான சான்றுகள் ஏற்கனவே வெளிப்பட்டிருந்தன. ஆனால் பரிசேயர்களுக்கு அது போதவில்லை. அவர்கள் இயேசுவிடம், “வானத்திலிருந்து ஓர் அடையாளத்தை எங்களுக்குக் காண்பியும்” என்று கேட்டார்கள். அதாவத...

Read